Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின் மக்ரோனின் பாதுகாப்புச் சபை கூடுகின்றது!

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின் மக்ரோனின் பாதுகாப்புச் சபை கூடுகின்றது!

13 ஆனி 2025 வெள்ளி 11:51 | பார்வைகள் : 1279


இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிக் காவல்துறைத் தலைவர் கொல்லப்பட்டார், நத்தான்ஸ் அணு நிலையம் பாதிக்கப்பட்டது, என்றும் இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதனைக் காரணமாக வைத்து இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல்; மக்ரோன், இன்று காலை 11.00 மணிக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபைக் கூட்டத்தை நடத்துகிறார்.

எலிசே மாளிகையின்; அறிக்கையின்படி, இந்த கூட்டம் மத்திய கிழக்கு நிலைமை தொடர்பானது என்றும். பிற்பகல் 5 மணிக்கு, பாலஸ்தீனப் பிரச்சனையை மையமாகக் கொண்ட பரிஸ் மாநாட்டை முடிக்கும்போது மக்ரோன் உரையாற்றவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்