Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் பலி

13 ஆனி 2025 வெள்ளி 10:49 | பார்வைகள் : 370


இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பே ஈரானின் அணுஉலைகளிற்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2001 இல் இவர் ஈரான் தலைநகரில் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பினார்.

தெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் எவ்வி டெவ்ரின் தெரிவித்துள்ளார்.

ஈரான் சுமார் 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது அவற்றை செயல்இழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்