அரசு எங்களுக்கு வீடுகள் வழங்காமல் இருக்கும்வரை, நாங்கள் அங்கிருந்து நகரமாட்டோம்!
12 ஆனி 2025 வியாழன் 20:05 | பார்வைகள் : 7267
பாரிஸ் 11வது வட்டார மாநகரசபை முன்னால் 250க்கும் மேற்பட்ட வீடில்லாத மக்கள் முகாமிட்டுள்ளனர்.
«அரசு எங்களுக்கு வீடுகள் கொடுக்காவிட்டால், நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்» என்று பேராட்டம் செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 ஜூன் 11, புதன்கிழமையன்று மாலையில், 250க்கும் மேற்பட்ட வீடில்லாதவர்கள், பாரிஸ் 11வது மாநகரசபை முன்பாக திரண்டுள்ளனர். தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Utopia 56 உள்ளிட்ட பல அமைப்புகளின் அழைப்பின் பேரில், இந்தக் குழுமம் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் எனக் கோரியது.
மாலை நேரம் முழுவதும், மாநகரசபை முன்பு பரவலாக முழக்கங்களும், தாளங்களின் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன.
அமைப்புகளின் தரவுகளின்படி, அந்த 250 பேரில் 17 தனியாக இருக்கும் சிறுவர்கள் என்றும் 80 குழந்தைகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan