ஜேர்மனியுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை விதிக்க போலந்து திட்டம்

12 ஆனி 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 786
ஜேர்மனியுடனான எல்லையில், கட்டுப்பாடுகளை விதிக்க போலந்து நாடு திட்டமிட்டுவருகிறது.
போலந்துக்குள் வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தால், இந்த கோடையில் ஜேர்மனியுடனான தன் எல்லையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து போலந்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் பிரதமரான டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி அரசு, புலம்பெயர்தல் விதிகளை கடுமையாக்கிவருகிறது. ஆகவே, ஜேர்மனி நோக்கி செல்லும் புலம்பெயர்வோர் போலந்து நாடு நோக்கி திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, போலந்து ஜனாதிபதியான கரோல் நவ்ரோக்கி, போலந்து எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த கோடையில் ஜேர்மன் எல்லையில், பகுதி எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.