மேற்பார்வையாளர் படுகொலை! - அமைச்சர்களை வெளுத்துவாங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!

12 ஆனி 2025 வியாழன் 15:53 | பார்வைகள் : 2942
இன்று ஜூன் 12, வியாழக்கிழமை அமைச்சர்கள் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி மக்ரோன் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ ஆகியோருடன் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
Nogent (Haute-Marne) நகர பாடசாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். தனது கண்டனத்தை வெளியிட்டதோடு, வன்முறைகளை அடியோடு நிறுத்துவதற்குரிய வழிமுறைகளை கண்டறிந்து தடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதன்போது மக்ரோன் குரலை உயர்த்தி சத்தமாக அமைச்சர்களை கேள்வி கேட்டதாகவும், அனைத்து காரணங்களையும் உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தயாரிக்கவும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025