Paristamil Navigation Paristamil advert login

இன்றும் - அதிக வெப்பம்.. இடி மின்னல் தாக்குதல்கள்! - 29 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இன்றும் - அதிக வெப்பம்.. இடி மின்னல் தாக்குதல்கள்! - 29 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

12 ஆனி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 1096


 

இன்று ஜூன் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் வரை நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவும் எனவும், நண்பகலின் பின்னர் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக 37℃ வரை வெப்பம் நிலவும் எனவும், நண்பகலின் பின்னர் 29 மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allier, Calvados, Cantal, Charente, Charente-Maritime, Côtes-d'Armor, Eure, Eure-et-Loir, Finistère, Gironde, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loire, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Mayenne, Morbihan, Orne, Puy-de-Dôme, Rhône, Sarthe, Seine-Maritime, Deux-Sèvres, Vendée, Vienne மற்றும் Haute-Vienne ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை Gard மாவட்டத்தில் 37.9℃ வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்