Paristamil Navigation Paristamil advert login

நீதிமன்றத்தில் வாய் திறக்காத முகமட் அம்ரா!!

நீதிமன்றத்தில் வாய் திறக்காத முகமட் அம்ரா!!

11 ஆனி 2025 புதன் 21:01 | பார்வைகள் : 2615


 

போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமட் அம்ராவினது முதலாவது நீதிமன்ற விசாரணை இன்று ஜூன் 11, புதன்கிழமை பரிசில் இடம்பெற்றது. பலத்த பாதுகாப்பின் கீழ் Condé-sur-Sarthe ((Orne) சிறைச்சாலையில் இருந்து அம்ரா அழைத்துவரப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற விசாரணைகளில் அம்ரா எந்த வித கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  ஒரு ஒற்றை வார்த்தை கூட அவர் தெரிவிக்கவில்லை எனவும் அமைதி காத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதை அடுத்து, விசாரணைகள் பிற்போடப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

முகமட் அம்ரா, கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் தப்பித்திருந்தார். இரு சிறைச்சாலைகளை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தார். பழைய வழக்குகள், கொலை வழக்கு, சிறையில் இருந்து தப்பித்த வழக்கு என பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்