Paristamil Navigation Paristamil advert login

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த சிறுமி!

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவரிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த சிறுமி!

11 ஆனி 2025 புதன் 18:28 | பார்வைகள் : 2672


ஜூன்  11 புதன்கிழமை இரவு, காம்பினேயில் (Compiègne)உள்ள ஓய்ஸ் ஆற்றில் குதித்த இளம் பெண்ணை இரண்டு தேசிய காவல்துறையினர் மீட்டனர்.

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆணிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தாகவும், மேலும் கத்தி மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், காம்பியென் காவல் நிலைய புலனாய்வாளர்களால் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட  நிலையில், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறுமி தாக்கிய நபரை சமூக ஊடகங்கள் மூலம்  சந்தித்ததாகவும் ஆனால் தற்போதைக்கு கூடுதல் தகவல்களை வழங்கவும் மறுத்துவிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்