கடும் வெப்பத்தின் பின்னர் ஆலங்கட்டி மழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

11 ஆனி 2025 புதன் 12:21 | பார்வைகள் : 2039
ஜுன் 11, இன்று புதன்கிழமை நாட்டின் தெற்கு மற்றும் தென் மேற்கு கரையோர மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நண்பகல் வரை மிக கடுமையான வெப்பமும் - அதன் பின்னர் மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று 36℃ வரை வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அதன் பின்னர் Ariège, Aude, Charente, Charente-Maritime, Dordogne, Finistère, Haute-Garonne, Gers, Gironde, Landes, Loire-Atlanque, Lot-et-Garonne, Morbihan, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Deux-Sèvres மற்றும் Vendée ஆகிய 18 மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு குறித்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற வானிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.