Paristamil Navigation Paristamil advert login

'பிரான்சின் வல்லமையை பறைசாற்றும் அணிவகுப்பு!'

'பிரான்சின் வல்லமையை பறைசாற்றும் அணிவகுப்பு!'

11 ஆனி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1313


 

ஜூலை 14, தேசிய நாளில் இராணுவ அணிவகுப்பு மிக எழுச்சியாக இடம்பெற உள்ளது. பிரான்சின் வல்லமையை பறைசாற்றும் விதத்தில் இவ்வருட அணிவகுப்புகள் இடம்பெற உள்ளன.

குறிப்பாக யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பெருமெடுப்பில் இடம்பெற்று வருவதால், ஐரோப்பிய எல்லைகளை பாதுகாக்க பிரான்ஸ் தயாராக இருப்பதைக் காட்டுவதற்காக இந்த தேசிய நாள் அணிவகுப்பை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணிவகுப்பில் முதன்முறையாக 7,000 பேர் கலந்துகொள்ள உள்ளன. இதற்கு முன்பாக 5,500 பேர் கலந்துகொண்டதே பெரும் எண்ணிக்கையாக இருந்தது.

63 போர் விமானங்கள், 33 உலங்குவானூர்திகள், 155 கவச வாகனங்கள், 200 குதிரைகள் என பெரும் எடுப்பில் இம்முறை சோம்ப்ஸ்-எலிசே களைக்கட்ட உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்