இது பாதுகாப்பின் ஒன்றிணைந்த படு தோல்வி - கப்ரியல் அத்தால்!

10 ஆனி 2025 செவ்வாய் 21:10 | பார்வைகள் : 2780
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ பாடசாலைக் கதவுகளில் உலோகங்களைக் கண்டறியும் பாதுகாப்புக் கதவுகள் போட வேண்டும் என்று தெரிவித்த யோசனையை மிகக் கிண்டலாக 'ஒரு தவறான நல்ல யோசனை' என யோசனையை கப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.
பிரான்சுவா பய்ரூ கொலேஜ் மற்றும் லிசே நுழைவாயில்களில் பாதுகாப்பு கதவுகளளை'சோதனை முறையில் அறிமுகப்படுத்த' விரும்புகிறார்.
சில பகுதிகளில் ஏற்கனவே நிறுவப்பட்ட 'நுழைவு அனுமதி அடையாளத்துடன் (badge) கூடிய சுழல் கதவுகள் மட்டுமே. இவை கூர்மையான ஆயுதங்கள் பள்ளிக்குள் நுழைவதை தடுக்க முடியாது' எனவும் குறிப்பிட்டார்.
உலோக கண்டறியும் கருவிகள் குறித்துஇ அட்டால் இது 'ஒரு தவறான நல்ல யோசனை' என்று கருதுகிறார். அவர் எச்சரிக்கையாக 'பயங்கரவாத அச்சுறுத்தலின் இந்த நேரத்தில் பள்ளி முன் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
'எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் வன்முறை உச்சத்தை தடுக்க செயல்படுவதற்கும்' அழைப்பு விடுத்தார்.
நோஜோன் கொலையானது 'சமூகத்தின் செயலிழப்பின் அடையாளம்' எனும் கப்ரியல் அட்டால் நோஜென்ட் கொலை 'நம் சமூகம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அடையாளம்' என்று குறிப்பிட்டு இதை 'ஒரு கூட்டு தோல்வி' என்று விவரித்துள்ளார்.
இருப்பினும்இ முன்னாள் பிரதமரான் அத்தால் 'தீர்வுகள் உள்ளன' என்று நம்புகிறார். ஆனால் 'கடந்த சில ஆண்டுகளாகஇ நடவடிக்கை எடுப்பதில் மிகவும் தாமதமாகிவிட்டது' என்று வருத்தம் தெரிவித்தார்.
ஆயுதங்களுக்குத் தடை போடுவதற்கு முன்னர் வன்முறையின் வேர்களை நோக்கிக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஊடுருவிக் கவனிக்கும் கதவுகள் மட்டுமே தீர்வல்ல. கடுமையான சட்டங்களும் தடுப்பு முயற்சிகளும் தேவை என தன் தீர்வை அத்தால் தெரிவித்துள்ளார்.
'சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தோல்விகளின் விளைவு இந்த சம்பவம்' என்பதும் அத்தாலின் பார்வை.