செவ்ரோனில துப்பாக்கிச் சூடு - 15 வயது இளைஞர் காயம் - உயிருக்கு ஆபத்து! முழு விபரம்!

10 ஆனி 2025 செவ்வாய் 20:10 | பார்வைகள் : 4896
சென் சன் துனியின் செவ்ரான் பகுதியில், ஜூன் 8-9 இரவு 15 வயது இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஜூன் 8-9 இரவு, செவ்ரானின் பொதொத் குடியிருப்புப் பகுதியில் உள்ள avenue Youri Gagarine இலுள்ள ஒரு கட்டிடத்தில் இந்த இளைஞர் நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார் - பின்பகுதி, இடுப்புப் பகுதி மற்றும் ஒரு காலில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
அவசர சிகிச்சைப் படையினரான SAMU அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் 'உயிருக்கு ஆபத்தான நிலை' (pronostic vital engagé) எனத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 9 மிமீ குண்டுகளின் உறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.U
பொபினி குற்றவியல் நீதிமன்றம் உடனடி விசாணைகளிற்கு ஆணையிட்டுள்ளது.
சென் சன் துனி மாவட்ட குற்றவியல் புலனாய்வு படை (SDPJ 93) விசாரணையை மேற்கொண்டுள்ளது
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1