செவ்ரோனில துப்பாக்கிச் சூடு - 15 வயது இளைஞர் காயம் - உயிருக்கு ஆபத்து! முழு விபரம்!
10 ஆனி 2025 செவ்வாய் 20:10 | பார்வைகள் : 10889
சென் சன் துனியின் செவ்ரான் பகுதியில், ஜூன் 8-9 இரவு 15 வயது இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். காயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஜூன் 8-9 இரவு, செவ்ரானின் பொதொத் குடியிருப்புப் பகுதியில் உள்ள avenue Youri Gagarine இலுள்ள ஒரு கட்டிடத்தில் இந்த இளைஞர் நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளார் - பின்பகுதி, இடுப்புப் பகுதி மற்றும் ஒரு காலில் குண்டுகள் பாய்ந்துள்ளன.
அவசர சிகிச்சைப் படையினரான SAMU அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. மருத்துவர்கள் 'உயிருக்கு ஆபத்தான நிலை' (pronostic vital engagé) எனத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 9 மிமீ குண்டுகளின் உறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.U
பொபினி குற்றவியல் நீதிமன்றம் உடனடி விசாணைகளிற்கு ஆணையிட்டுள்ளது.
சென் சன் துனி மாவட்ட குற்றவியல் புலனாய்வு படை (SDPJ 93) விசாரணையை மேற்கொண்டுள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan