பிரான்சுவா பய்ரூ மாணவர்களின் மனநல விபத்துகளில் கவனம்!

10 ஆனி 2025 செவ்வாய் 17:03 | பார்வைகள் : 559
பிரதம மந்திரி இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்தும் பணியாற்ற விரும்புகிறார். 'முதல் எச்சரிக்கையிலேயே, ஒரு பரிசோதனை, நோயறிதல் மற்றும் சிகிச்சை முறை (அல்லது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்) இவற்றை நடைமுறைப்படுத்த முடியும்,' என பிரதமர் இன்றைய கத்திக்குத்துத் தாக்குதலின் பின்னர் பாராளுமன்றக் கேள்ளிநேரத்தில் தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு கூர்மையான ஆயுதங்களை (கத்தி, முதலியன) தடை செய்வதோடு, பிரான்சுவா பய்ரூ 'இளைஞர்களின் மனப்பலவீனத்தையும், அடிக்கடி ஏற்படும் மனநல விபத்துகளையும் எதிர்கொள்வதற்கான கொள்கையை உருவாக்க' விரும்புகிறார்.
தொடர்ந்து பேசிய பிரான்சுவா பய்ரூ மீண்டும், 'அரசாங்கம் பள்ளி நுழைவாயில்களில் பாதுகாப்புச் சோதனைக் கதவுகள் (expérimentation des portiques) நடைமுறைப்படுத்துவதை முன்மொழிகிறது' என்றும் தெரிவித்துள்ளார்.