Sevran : துப்பாக்கிச்சூடு 15 வயது சிறுவன் படுகாயம்!!
9 ஆனி 2025 திங்கள் 19:01 | பார்வைகள் : 5268
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளான்.
நள்ளிரவுக்கு சற்று முன்பாக Yuri Gagarin Avenue பகுதியில் காத்திருந்த குறித்த சிறுவனை நோக்கி நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிறுவனின் பின் பகுதியில் குண்டு பாய்ந்து, படுகாயமடைந்துள்ளான்.
மருத்துவமனையில் சிறுவன் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்படுகிறது. 9 மி.மீ கலிபர் வகை துப்பாக்கிச் சன்னங்கள் சிலவற்றை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan