உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - ஜோர்தான் பார்தெல்லா!

9 ஆனி 2025 திங்கள் 18:06 | பார்வைகள் : 2400
இன்று Loiret பகுதியில் தேசியப் பேரணிக் கட்சியான Rassemblement National இன்று தங்களின் ஐரோப்பிய சகாக்களுடன் பெரும் அரசியற் கூட்டம் ஒன்றை நடாத்துகின்றனர். இதில் மரின் லூப்பனைத் தொடர்ந்து ஜோர்தோன் பார்தெல்லா உரையாற்றும் போது புரூனோ ரத்தைய்யோ ராஜினாமாச செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
PSG வெற்றிக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளை தடுக்கத் தவறியமைக்காக உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
மே 31 ஆம் தேதி பாரீஸ் சன் ஜேர்மேன் (PSG) அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் வெற்றியடைந்த பிறகு, நகரத்தில் பரவலான வன்முறைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டன.
Rassemblement National கட்சியின் தலைவர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Jordan Bardella, , இந்த வன்முறைகளைப் பார்த்து பாதுகாப்பு துறையின் தோல்வி எனக் கண்டித்தார்.
'இந்த பாதுகாப்பு பேரழிவு முன்கூட்டியே கணிக்கப்படாததும், முறையாக கையாளப்படாததும் மிக பெரிய தவறு. குறைந்தபட்சமாக Bruno Retailleau தனது பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.
மே 31 இரவு நிகழ்ந்தவை:
பரிஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மோசமான வன்முறைகள்
22 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர்.
ஒரு இளைஞர், ஸ்கூட்டரில் பயணம் செய்யும் போது, ஒரு கார் மோதி உயிரிழந்தார்
ஜோர்தான் பார்தெல்லா மற்றும் அவரது கட்சி, குற்றங்கள், அடக்குமுறையின் தோல்வி, மற்றும் அரசின் செயலிழப்பு ஆகியவை பற்றிய கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025