சம்பளமின்றி வேலை செய்யும் நாள்: சமூக நலனுக்கான பங்களிப்பு!!
9 ஆனி 2025 திங்கள் 14:55 | பார்வைகள் : 12038
பெந்தகோஸ் திங்கள் கடந்த 21 ஆண்டுகளாக "ஒற்றை வேலை நாள்" என அழைக்கப்படுகிறது. இந்த நாள் சிலருக்கு விடுமுறையாக இருந்தாலும், பலர் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.
இது 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வெப்பஅலையின் பின்னர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளர்களுக்கான நலத்துறைக்கு நிதி திரட்டவதற்காக தொடங்கப்பட்டது. இந்த நாளில் வேலை செய்ய வேண்டும், ஆனால் ஊதியம் வழங்கப்படாது. இதற்குப் பதிலாக, நிறுவனங்கள் 0.3% சம்பளச் செலவாக சமூக பாதுகாப்புத் திட்டத்துக்கு பங்களிக்கின்றன.
2025-இல், இந்த ஒற்றை வேலை நாள் மூலம் சுமார் 3.5 பில்லியன் யூரோ வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி, EHPADs, MDPH மற்றும் APA போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தப்கிறது.
2008 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நாள் பெந்தகோஸ் திங்கள் அல்லாமல் வேறு எந்த நாளிலும் பங்களிப்பு செய்யலாம் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்றவர்கள், உதவித்தொகை பெறுபவர்கள் கூட 0.3% அளவில் பங்களிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan