Paristamil Navigation Paristamil advert login

காஸாவுக்குச் சென்ற கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது! - இஸ்ரேலின் அராஜத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!!

காஸாவுக்குச் சென்ற கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது! - இஸ்ரேலின் அராஜத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!!

9 ஆனி 2025 திங்கள் 11:39 | பார்வைகள் : 769


மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு காஸாவுக்குச் சென்ற கப்பல் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து பரிசில் இன்று ஜூன் 9, திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்ற உள்ளது.

«Flottille de la Liberté»  எனும் கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மாலை 6 மணிக்கு  Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. பிரான்சின் மார்செய் துறைமுகத்தில் இருந்து குறித்த படகு வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டிருந்தது. அதில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் தன்னார்வ தொண்டூழியருமான Rima Hassan உள்ளிட்ட 22 பேர் அதில் பயணித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய கடற்படையினர் குறித்த கப்பலைக் கைப்பற்றியுள்ளனர். குறித்த கப்பல் இன்று இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த அராஜகத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு La France Insoumise கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்