அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்: இ.பி.எஸ்.,

9 ஆனி 2025 திங்கள் 13:56 | பார்வைகள் : 258
அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், இ.பி.எஸ்., பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்.
பகல் கனவு
200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு. மக்களைப்பற்றி கவலை அவருக்கு இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., அபார வெற்றி பெறும். அ.தி.மு.க., ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.
குடும்ப ஆட்சி
தி.மு.க.,வின் குடும்ப அரசியலாக, குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்கிய பெருமை தி.மு.க.,வையே சாரும். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக முழுவதும் சிறப்பான சாலைகள் மேம்பாலங்கள் கொண்டு வரப்பட்டன.
ஸ்டிக்கர்
தி.மு.க., ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க., செயல்படுத்தி வருகிறது. மக்களைப் பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு கவலை இல்லை. தமிழகத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தையும் தி.மு.க., அரசு முடக்கியுள்ளது
ஆதரியுங்கள்
நல்லாட்சி தமிழகத்தில் நிலவ அ.தி.முக., கூட்டணியை ஆதரியுங்கள். 2010ல் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்த அ.தி.மு.க., அரசு நீதிமன்றம் மூலம் முயற்சித்தது. நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஓட்டளித்த மக்களை பற்றி கவலை இன்றி தி.மு.க.,வில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.