ஓய்வூதிய நிதியை சீராக்க வயதை அதிகரிக்க தேவையில்லை: CGT முன்மொழியும் தீர்வுகள்!!
7 ஆனி 2025 சனி 22:55 | பார்வைகள் : 10295
ஓய்வூதிய வழிகாட்டி மன்றமான COR, அரசாங்கத்தின் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே சேவையளிக்கிறது என CGT குற்றம்சாட்டியுள்ளது.
2030-ம் ஆண்டுக்கான ஓய்வூதிய சீரதிருத்தத்தின் பிழவை முந்தைய கணிப்புடன் ஒப்பிட்டால் பாதியாகக் குறைத்துள்ளது, ஆனால் 2070-க்கு அது உயர்வாக மாற்றியுள்ளதாக COR தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் CGT செயலாளர் டெனிஸ் கிரவுயில் (Denis Gravouil), COR தலைவர் ஜில்பேர் சேத் (Gilbert Cette) "இம்மானுவேல் மக்ரோனின் நண்பர்" என்றும், அவர் "இரட்டை வேடம் போடுகிறார்" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓய்வூதிய நிதியை சமநிலைப்படுத்த ஓய்வூதிய வயதை உயர்த்த தேவையில்லை என CGT வலியுறுத்துகிறது. வேலைவாய்ப்பு விகிதத்தை உயர்த்தி, ஊதியங்களை அதிகரிப்பதன் மூலம் பணிப்பங்களிப்புகளை அதிகரிக்கலாம்.
பெண்கள்-ஆண்கள் சமத்துவம், பங்களிப்பு விலக்குகளை நீக்குவது, மற்றும் பணியாளர் பங்களிப்பு மோசடிகளைத் தடுப்பது போன்ற வழிகளின் மூலம் 6 முதல் 30 பில்லியன் யூரோ வரை நிதி கிடைக்கக்கூடும். "ஓய்வூதியத்தை நிதியளிக்க வழிகள் உள்ளன, அதை ரத்து செய்து வைப்பதும் சாத்தியம்" என டெனிஸ் கிரவுயில் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan