மொனாக்கோ சென்றடைந்த மக்ரோன் தம்பதிகள்.. மன்னர் வரவேற்றார்!!

7 ஆனி 2025 சனி 20:53 | பார்வைகள் : 416
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மொனாக்கோ நாட்டுக்கு ஜனாதிபதி மக்ரோன் தம்பதிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜூன் 7, இன்று சனிக்கிழமை சற்று முன்னர் அவர்கள் மொனாக்கோவைச் சென்றடைந்ததாகவும், அவர்களை அரசர் Albert II மற்றும் ராணி Charlene ஆகியோர் வரவேற்றனர். அவர்களது 10 வயது பிள்ளைகளும் உடன் இருந்தனர்.
அத்தோடு மூன்று அமைச்சர்களும் அங்கு குழுமி நின்று மக்ரோன் தம்பதிகளை வரவேறுள்ளனர்.
நாளை மறுநாள் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாடு மொனாக்கோவில் இடம்பெற உள்ளது. அதனை முடிந்துக்கொண்டு மக்ரோன் கனடாவுக்கு G7 மாநாட்டுக்காக பயணிக்க உள்ளார்.