Paristamil Navigation Paristamil advert login

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்

6 ஆனி 2025 வெள்ளி 17:42 | பார்வைகள் : 387


சாம்பார் சாதம் என்றாலே பலருக்கும் பிடிக்காது. எப்ப பார்த்தாலும் சாம்பார் சாதமா என்று கேள்வி எழுப்புவார்கள்? அப்படிப்பட்டவர்களுக்கு மசாலா நிறைந்த சுவையான சாம்பார் சாதம் செய்து கொடுத்தா, மீண்டும் எப்போ அந்த சாதத்தை செய்வீங்கன்னு கேட்பாங்க. அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த "ஒன் பாட் சாம்பார் சாதம்".

தேவையான பொருட்கள்: அரிசி துவரம் பருப்பு கேரட்,பீன்ஸ் சௌசௌ சின்ன வெங்காயம் பூண்டு மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சீரகம், மிளகு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தனியா, வர மிளகாய், எண்ணெய்.

செய்முறை: முதலில் ஒரு பிரஷர் குக்கரில் தேவையான அளவு அரிசி,துவரம் பருப்பு, விரும்பிய காய்கறிகள் (உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பட்டாணி, முட்டைக்கோஸ், சௌசௌ போன்றவை) சின்ன வெங்காயம் பூண்டு மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.

இந்த சாம்பார் சாதத்திற்கு சிறந்தது அந்த மசாலா பொடி தான். அதற்கு ஒரு பேனில் சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு வெந்தயம், தனியா,வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் கடுகு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்த பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து, சிறிதளவு புளித்தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே வேக வைத்த சாதத்துடன் இந்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து, நெய்யில் தாளித்த முந்திரியை சேர்த்து இறக்கினால் சுட சுட சூப்பரான "ஒன் பாட் சாம்பார் சாதம்" தயார்.

எந்தவொரு சைட்டிஷ் இல்லாமலே அப்படியே இந்த சாம்பார் சாதத்தை சாப்பிடலாம். இனி சாம்பார் சாதம் வேணும்னு குழந்தைகள் கேட்டால் கண்டிப்பாக லஞ்ச் பாக்ஸா இதை செய்து கொடுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்