நள்ளிரவில் தீ விபத்து... சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலி!!
6 ஆனி 2025 வெள்ளி 09:01 | பார்வைகள் : 6061
நேற்று நள்ளிரவு Reims நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
எட்டு மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் தீ பரவியுள்ளது. மிக வேகமாக தீ பரவி வீடு முழுவதும் பரவியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இதில் பலியாகியுள்ளனர். இதில் இருவர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
62 தீயணைப்பு படையினர் இணைந்து போராடி தீயை கட்டுப்படுத்தினர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
தீ விபத்தில் நால்வர் பலியானமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan