புதிய யூரோ பணத்தாள்கள்!

6 ஆனி 2025 வெள்ளி 06:54 | பார்வைகள் : 2587
புதிய வடிவிலான பணத்தாளர்கள் பாவனைக்கு கொண்டுவரப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 5, நேற்று வியாழக்கிழமை இத்தகவலை தலைவர் Christine Lagarde வெளியிட்டார். ”நாங்கள் புதிய வடிவிலான பணத்தாள்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இரண்டு மூன்று ஆண்டுகளில் அவை பாவனைக்கு வரும். நாங்கள் யூரோ தாளின் நோக்கத்தை சிறிதாக மாற்ற உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டார்கள் யூரோமீது நன்மதிப்பு கொண்டு யூரோவில் முதலீடு செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
யூரோ பணத்தாள்கள் 21 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.