Paristamil Navigation Paristamil advert login

ஜூன் 6 வெள்ளிக்கிழமை, 12 மாவட்டங்களிற்கு மழையுடனான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை

ஜூன் 6 வெள்ளிக்கிழமை, 12 மாவட்டங்களிற்கு மழையுடனான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை

6 ஆனி 2025 வெள்ளி 01:10 | பார்வைகள் : 1153


Météo-France, ஜூன் 6 வெள்ளிக்கிழமை 12 மாவட்டங்களிற்கு மழையுடனான இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை
அளித்துள்ளது. குறிப்பாக Auvergne-Rhône-Alpes பகுதி அதிக ஆபத்தான நிலைமையில் உள்ளது.

எச்சரிக்கை வெளியிடப்பட்ட மாவட்டங்கள்
Ain, Ardèche, Doubs, Drôme, Isère, Jura, Loire, Haute-Loire, Rhône, Saône-et-Loire, Savoie மற்றும் Haute-Savoie.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  Midi-Pyrénées முதல் Franche-Comté வரை புயல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. Auvergne-Rhône-Alpes பகுதியில் பேரபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலை தற்காலிகமாக உயரலாம், இது வளிமண்டலத்தில் மேலதிக குழப்பத்தை உருவாக்கும்.

வார இறுதியில் வானிலை சனிக்கிழமையிலும் வானம் மேகமூட்டமாயிருக்கும். ஞாயிறு நாளில் சிறிது மேம்பாடு காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் 15°C முதல் 20°C வரை மட்டுமே இருக்கும். Côte d’Azur மற்றும் Corsica வில்  உச்ச வெப்பநிலை இருக்கும்.

இந்த எச்சரிக்கையானது வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்