Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகொப்டர் விபத்து – 6 பேர் உயிரிழப்பு

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகொப்டர் விபத்து – 6 பேர் உயிரிழப்பு

9 வைகாசி 2025 வெள்ளி 09:16 | பார்வைகள் : 239


இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக பதிவாகியுள்ளது.

இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
 

இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்