மழை - இடி மின்னல் தாக்குதல்கள் : ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

9 வைகாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 545
மே 9, இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் இந்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ain, Cantal , Doubs, Isère, Jura, Loire, Haute-Loire, Puy-de-Dôme மற்றும் Pyrénées-Atlantiques ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலில் இருந்து மாலை 7 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், இன்று பல இடங்களில் 17°C வரையான மிதமான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.