Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார அமைச்சகத்தின் கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் பலி!!

பொருளாதார அமைச்சகத்தின் கட்டிடத்தில் இருந்து குதித்து பெண் பலி!!

8 வைகாசி 2025 வியாழன் 15:28 | பார்வைகள் : 6423


பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள பொருளாதார அமைச்சகத்தின் கட்டிடத்தில் இருந்து (ministère de l'Économie) குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

மே 6, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. பொருளாதார அமைச்சகத்தில் பணிபுரியும் 49 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் 300 மீற்றர் உயரமுடைய கட்டிடத்தின் கூரையில் ஏறி, உலங்குவானூர்தி இறங்கும் 'l'héliport' இல் இருந்து கீழே குதித்துள்ளார். உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அண்மைய நாட்களில் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026