Paristamil Navigation Paristamil advert login

pont de Bondy : பாரிய தீ.. மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்..!!

pont de Bondy : பாரிய தீ.. மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்..!!

7 வைகாசி 2025 புதன் 15:37 | பார்வைகள் : 2545


Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள pont de Bondy மேம்பாலத்துக்கு கீழே ஏற்பட்ட தீ பரவலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேம்பாலத்தில் கீழ் அமைந்திகள் கூடாரம் காலை 7.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள்  பல்வேறு அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.  தீ அணைக்கப்பட்டது.

56 தீயணைப்பு படையினர் 16 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அகதிகளில் மூவர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pont de Bondy பாலம் மீது உலங்குவானூர்த்தி இறக்கப்பட்டு காயமடைந்தவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்