Paristamil Navigation Paristamil advert login

பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் - தங்கச் சுரங்கத்தில் சடலமாக மீட்பு

பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் -  தங்கச் சுரங்கத்தில் சடலமாக மீட்பு

6 வைகாசி 2025 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 12559


கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் லிமாவிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்கு லா லிபர்டாட் பகுதியில் உள்ள பெருவின் படாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் இந்த கொடூர செயல் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழுக்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் முக்கிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான பெருவின் முக்கிய பொருளாதாரத் துறையாக சுரங்கத் தொழில் உள்ளது.