இடி மின்னல் தாக்குதல்கள் : 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

6 வைகாசி 2025 செவ்வாய் 10:43 | பார்வைகள் : 321
இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக இன்று மே 6, செவ்வாய்க்கிழமை நாட்டின் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இன்று தெற்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும், Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ariège, Haute-Corse, Haute-Garonne, Gers, Landes, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Tarn மற்றும் Tarn-et-Garonne மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.