ஆலங்கட்டி மழையால் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தால் நஷ்டஈடு பெறுவது எப்படி?

4 வைகாசி 2025 ஞாயிறு 15:28 | பார்வைகள் : 526
நாட்டின் பல பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழையால் வாகனங்கள் நேற்று சேதமடைந்துள்ளன.
காரின் மேல்புறம், கண்ணாடிகள் போன்றவை பழுது பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக புகைப்படங்களுடன் காப்பீட்டாளரிடம் "ஐந்து வேலை நாட்களுக்குள்" புகார் அழிக்க வேண்டும்.
புகைப்படத்தில் அந்நாள் தேதியுடன் இருப்பது சிறந்தது, மேலும் ஒரு நிபுணர் சேதத்தை மதிப்பீடு செய்வார். புகார் கொடுக்கும் வரை வாகனப்பழுதை திருத்த வேண்டாம்.
சாதாரண காப்பீட்டை (assurance au tiers) வைத்திருப்போர் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெறமுடியாது. ஆனால் "tiers plus" அல்லது "tous risques" போன்று விரிவான காப்பீடுகள் இருந்தால், climatiques événements உத்தரவாதத்தின் கீழ் இழப்பீடு பெறலாம்.
இதே போல் "brise de glace" உத்தரவாதம் இருந்தால், கண்ணாடி பாகங்கள் (வண்டியின் முன் கண்ணாடி, ஜன்னல்கள், பின்புற கண்ணாடிகள்...) சேதமானால் நஷ்டஈடு திரும்பப்பெறலாம்.