இலங்கை வந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளா?

3 வைகாசி 2025 சனி 14:50 | பார்வைகள் : 953
சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் இருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.