இரத்தக்களறிப் படுகொலை - ஆனால் பயங்கவாதம் அல்ல!

3 வைகாசி 2025 சனி 11:20 | பார்வைகள் : 822
«Gard பள்ளிவாசல் படுகொலையில் கொல்லப்பட்ட அபூபக்கர் சிசேயின படுகொலையானது, இரத்தம் தோய்ந்த கொடூரப் படுகொலையாகும். ஆனாலும் இதற்கும் பயங்கவாதத்திற்கும் தொடர்பில்லை. இது ஒரு தனிப்பட்டவனின் கொலைவெறி. தற்போதைய கட்டத்தில் இதைப் பயங்கரவாதத்தில் இணைக்க முடியாது»
என நீம் பெருநகரத்தின் அரச சட்டப் பிரதிநிதி (procureure de la République ) செசில் கெனாக் (Cécile Gensac) தெரிவித்துள்ளார்.
«இந்தக் கொலைக்கான அடிப்படைவாதம் எதுவும் இல்லை. ஏதாவது ஒரு இலக்கைக் கொலை வேண்டும் என்ற தனிப்பட்ட வெறி மாத்திரமே இருந்துள்ளது»
«அத்தோடு தேசியப் பங்கவாத் தடைப்பரிவின் நீதித்துறையும் இந்த வழக்கைப் பதிவு செய்யவில்லை»
என அரச சட்டப் பிரதிநிதி செசில் கெனாக் ஊடகங்களிற்கு செவ்வி வழங்கி உள்ளார்.