Le Doliprane தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்!

2 வைகாசி 2025 வெள்ளி 21:19 | பார்வைகள் : 2705
பிரான்சில் மிகவும் பரவலாக பரிந்துரைக்கப்படும் மருந்தான Le Doliprane தற்போது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது.
Sanofi நிறுவனம், தனது துணை நிறுவனமான Opella 50% பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனம் CD&R-க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் Le Dolipraneஐ தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக மாறியுள்ளது. அதே நேரத்தில், Sanofi 48.2% பங்குகளை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.
இந்த மாற்றத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இருப்பினும், Le Doliprane பிரான்ஸிலேயே தயாரிக்கப்படும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுத் துறைகளில் நிலையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் Opella மற்றும் Sanofi தலைமை நிர்வாகிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.