பாடசாலை இலவச உணவுத்திட்டம்: 1,000 யூரோ வரை அபராதம்!!

2 வைகாசி 2025 வெள்ளி 15:51 | பார்வைகள் : 2759
சென்ட்-டெனிசில் உள்ள பள்ளிகளில், 2024-2025 கல்வியாண்டில் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் பெற்றோர்களின் பொருளாதார சுமைகளை குறைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டாலும், மாணவர்கள் உணவை பயன்படுத்த தவறினால், குறிப்பாக முன்பதிவு இல்லாமல் வந்தால், பெற்றோர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. விதி மீறல்களின் அடிப்படையில் 1,000 யூரோ வரை அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த அபராத நிபந்தனைகள் சில பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், பிள்ளைகளை உணவுக்கூடத்தை பயன்படுத்தாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையை சீர்செய்ய நகராட்சி ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்து சேவையை மேம்படுத்த முயற்சிக்கிறது.
இத்திட்டத்தின் இலக்கு உணவுத் தரத்தை மேம்படுத்தி, உணவு வீணாக்காமல் தடுக்கும் நடவடிக்கையாகும்.