பயங்கரவாத பின்னணியில் இருப்போர் மீது நடவடிக்கை தேவை; போர் தேவையில்லை: திருமாவளவன்

2 வைகாசி 2025 வெள்ளி 13:56 | பார்வைகள் : 1869
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை. அடுத்த கணக்கெடுப்பு 2031ல் வரும் என தெரிகிறது.
அப்போது பா.ஜ., ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது இந்த அறிவிப்பை செய்திருப்பது கண்துடைப்புதான். இந்தியா கூட்டணியிலுள்ள எதிர்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை பா.ஜ., அறிவித்து இருக்கிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்பினார். டில்லியில் அமைச்சரோடு ஆலோசித்தவர், பீஹாருக்கு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்பதுபோல பா.ஜ., அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025