சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் சென்னையில் கைது!
2 வைகாசி 2025 வெள்ளி 05:43 | பார்வைகள் : 3319
சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சமீபத்தில், சென்னை குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதியில், சட்ட விரோதமாக பதுங்கி இருந்த, வங்கதேசத்தை சேர்ந்த, 33 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய வங்கதேசத்தினர், 33 பேரில், 25 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பூந்தமல்லி அருகே அகரமேல் கிராமத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan