Paristamil Navigation Paristamil advert login

எதற்காக மரின்லூப்பன் மே1 இல் பரிஸ் வரவில்லை?

எதற்காக மரின்லூப்பன் மே1 இல் பரிஸ் வரவில்லை?

2 வைகாசி 2025 வெள்ளி 00:00 | பார்வைகள் : 792


 

சில வருடங்களிற்கு முன்னர் வழமையாக பரிசிலுள்ள ஜோந்தார்க் (Jeanne d’Arc) சிலைக்கு முன்னாள் தனது பேரணியை மரின் லூப்பன் ஆரம்பிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த வருடத்திலிருந்து Rassemblement national  யின் பெரும் சந்திப்பு வேறு வேறு நகரங்களைக் குறிவைத்துள்ளது.

இந்த வருட மே1 அன்று மரின் லூப்பன் மற்றும் ஜோர்தான் பார்தெல்லா ஆகியோர் நார்போன் (Narbonne -Aude) நகரத்தைக் குறிவைத்துள்ளனர். இங்கு 5.000 இற்கும் மேற்பட்டவர்களிற்கு முன்னாள் உரையாற்றி உள்ளனர்.

எதற்காக இந்த நகரம் குறிவைக்கப்பட்டது?

இந்த நகரம் முதலில் சோசலிஸ்ட் மற்றும் எமானுவல் மக்ரோன் ஆகியோரின் கோட்டையாக விளங்கியது. ஆனால் 2022 ஆம் ஆண்டுத்த தேர்தலில் மரின் லூப்பன் இங்கு முதற்சுற்றில் 27 சதவீத வாக்குகளையும் இரண்டாம் சுற்றில் 49 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார்.

ஆனாலும் தேர்தல் இறுதியில் 55 சதவீத மொத்த வாக்குகளால் எமானுவல் மக்ரோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை முறியடித்து, 2027ல் தனது கட்சியின் வாக்கு வீதத்தை அதிகரிக்க மரின் லூப்பனும் ஜோர்தான் பார்தெல்லாவும் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு நகரமாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்