Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுக்காக போரிட்ட 4700 வடகொரிய வீரர்கள் பலி - அதிர்ச்சி தகவல்

ரஷ்யாவுக்காக போரிட்ட 4700 வடகொரிய வீரர்கள் பலி - அதிர்ச்சி தகவல்

1 வைகாசி 2025 வியாழன் 09:37 | பார்வைகள் : 929


ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதிப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போராட்டதில் வடகொரிய வீரர்கள் 4700 பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் தென்கொரியா தெரிவித்துள்ளது.

சமீபத்தில்நடந்த தென்கொரியாவின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தேசிய புலனாய்வு சேவை இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி லீ சியாங் குவென் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ரஷ்யா-உக்ரைன் போரில் 600 உயிரிழப்புக்கள் உட்பட 4700 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் காயமடைந்த 2000 வடகொரிய வீரர்கள் விமானம் அல்லது ரயில் மூலமாக வடகொரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போரில் இறந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் தகனம் செய்யப்பட்டனர். ஜனவரியில் சுமார் 300 வடகொரிய வீரர்கள் இறந்தனர். மேலும் 2700 பேர் காயமடைந்தனர்.

இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 4000ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்