கைதிகள் செலவைப் பொறுக்கவேண்டும் - 83 சதவீத ஆதரவு!!

30 சித்திரை 2025 புதன் 12:13 | பார்வைகள் : 2702
கடந்த திங்கட்கிழமை பிரான்சின் நீதியரசர் ஜெரால்ட் தர்மனமன் சிறையிலிருக்கும் கைதிகள் தங்களிற்கான செலவுகளைச் செலுத்தும் சட்டத்தினை மாற்றியமைக்கப் போவதானத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக CNEWS இற்காக CSA ஒரு கருத்துக் கணிப்பைச் செய்துள்ளது.
இன்று செய்யப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் நீதியமைச்சரின் திட்டத்திற்கு 83 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 1 சதவீதமானோர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என இந்தக் கருத்துக் கணிப்புத் தெரிவிக்கின்றது.