Paristamil Navigation Paristamil advert login

எட்டு மாவட்டங்களுக்கு சீரற்ற வானிலை எச்சரிக்கை!!

எட்டு மாவட்டங்களுக்கு சீரற்ற வானிலை எச்சரிக்கை!!

23 வைகாசி 2025 வெள்ளி 08:10 | பார்வைகள் : 727


 

இன்று மே 23, வெள்ளிக்கிழமை நாட்டின் எட்டு மாவட்டங்களில் சீரற்ற வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு மாவட்டங்களான Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes , Corse-du-Sud, Haute-Corse, Gers, Gironde, Landes மற்றும் Var ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள், ஆலங்கட்டி மழை போன்ற சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்