புருனோ ரத்தெய்யோ மீது மக்ரோனின் கோபம் - பனிப்போர்

23 வைகாசி 2025 வெள்ளி 00:24 | பார்வைகள் : 5857
புருனோ ரத்தெய்யோ லே ரெப்புப்ளிகன் (Les Républicains) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவரது அரசியல் சுதந்திரம் மக்ரோனுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது வெற்றியைச் சுற்றியுள்ள வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் உரைகள், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மக்ரோன், புருனோ ரத்தெய்யோவை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார், குறிப்பாக முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் குறித்த ரகசிய அறிக்கையை முன்னதாக ஊடகங்களிற்கு வெளியிட்டமையை காரணமாக வைத்து மக்ரோன் தன் கோபத்தைக் காட்டி உள்ளார்.
புருனோ ரத்தெய்யோவை சிலர் பிரபலமாக மாற்றுகிறோம் என்று அவரது செயல்கள் அரசு ஒற்றுமைக்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் மக்ரோனின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எச்சரிக்கின்றனர்.
ஜனாதிபதிக்கும் உள்துறை அமைச்சரிற்கும் இடையில் அரசியல் பனிப்போர் ஆரம்பமாகி உள்ளது. ஒன்றாக வேலை செய்யவேண்டியவர்கள் கட்சி பேதத்தில் நிற்கின்றனர்.
தற்போதைய சட்டமன்றத்தில் லே ரெப்புப்ளிக்கன் பலம் குறைந்தபோதிலும், புருனோ ரத்தெய்யோ தனது புதிய நிலையை அரசியலில் உறுதிப்படுத்த நினைக்கின்றார்.
புருனோ ரத்தெய்யோ பொதுவான ஒப்பந்தத்தை உடைத்தால், தன் இடத்தை இழக்கக்கூடும் என்றும் மக்ரோன் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1