இந்தியா-பாக்., போர் நிறுத்தம்; பார்லி குழுவிடம் விளக்கம் அளித்தார் விக்ரம் மிஸ்ரி!

20 வைகாசி 2025 செவ்வாய் 17:01 | பார்வைகள் : 103
இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.
இந்தியா - பாக்., இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்; விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. எந்த சூழ்நிலையில் இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். வெளியுறவு துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம் பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்.பி., க்கள் சசிதரூர், அசாதுதீன் ஓவைசி, அபராஜிதா சாரங்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களிடம், இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து முழு விளக்கத்தை விக்ரம் மிஸ்ரி அளித்தார்.