Paristamil Navigation Paristamil advert login

des Halles : சடலம் மீட்பு.. விசாரணைகள் ஆரம்பம்!!

des Halles : சடலம் மீட்பு.. விசாரணைகள் ஆரம்பம்!!

19 வைகாசி 2025 திங்கள் 13:45 | பார்வைகள் : 5624


பரிசின் மத்தியில் உள்ள Forum des Halles அங்கில் இருந்து சடலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று மே 18, ஞாயிற்றுக்கிழமை நண்பகலின் பின்னர் இச்சடலம் மீட்கப்பட்டது. வீடற்றவர் (SDF) ஒருவரது சடலமே மீட்கப்பட்டதாகவும், அவரது முகத்தில் திரவம் ஒன்றினால் தாக்கப்பட்டதற்குரிய அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலத்துக்கு அருகே அவரது மேலங்கி இருந்ததாகவும், அதில சில இரத்தக்கறைகள் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026