பரிஸ்-ஓர்லி விமான நிலையம் - 40 சதவீத விமானங்கள் ரத்து!
18 வைகாசி 2025 ஞாயிறு 08:15 | பார்வைகள் : 4823
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) முழுவதும் பரிஸ்-ஓர்லி (Paris-Orly) விமான நிலையத்தில் 40சதவீத விமானங்களை ரத்து செய்யுமாறு, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என தேசிய விமானப் போக்குவரத்துத் துறை (DGAC - Direction générale de l'aviation civile) தெரிவித்துள்ளது.
ஓர்லி கட்டுப்பாட்டு மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, ஞாயிறு பிற்பகல் விமான போக்குவரத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன,' என DGAC கூறியுள்ளது.
DGAC, விமான நிறுவனங்களுக்கு, அந்த நாளின் இறுதிவரை 40% விமானங்களை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளது.
ஓர்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
DGAC தெரிவித்தபடி, தீவிரமாக தொழில்நுட்ப குழுக்கள் நிலையை சீர் செய்ய முயற்சித்து வருகின்றன. ஆனால், திங்கட்கிழமையிலும் (மே 19) இந்த தாக்கம் நீடிக்குமா என்பது தற்போது தெளிவாகக் கூறப்படவில்லை.
2024ஆம் ஆண்டில், Paris-Orly விமான நிலையம் 3.3 கோடி பயணிகளை சந்தித்தது. இது, Paris-Charles-de-Gaulle விமான நிலையத்தின் பயணிகளின் பாதியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan