ருவானில் பரபரப்பு : லிசேயில் தீ விபத்து!!

17 வைகாசி 2025 சனி 14:48 | பார்வைகள் : 502
ருவான் (Rouen - Seine-Maritime) நகரில் அமைந்துள்ள டலஉéந குடயரடிநசவ் மேல்நிலைப் பாமசாலையில்;, இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. பள்ளியின் 1,200 மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் என Seine-Maritime தீயணைப்பு துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாடசாலையின் ஒரு மாடிப் படிக்கட்டுப் பகுதியில்தான் முதலில் தீ கண்டறியப்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து செயல்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலைமையிலும், எந்தவொரு மாணவரும் காயமடையவில்லை என்பது மிகப்பெரிய நிம்மதிக்குரியது விடயமாகும்.
காவற்துறையினர் தற்போது தீ விபத்துக்கான காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்சமயம் இது யாரும் செய்த குற்றமா? அல்லது உண்மையான விபத்தா? என்பதே விசாரணையின் முக்கிய மையமாக உள்ளது.