Paristamil Navigation Paristamil advert login

விடுதலையானார் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி!!

விடுதலையானார் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி!!

15 வைகாசி 2025 வியாழன் 12:01 | பார்வைகள் : 6604


'ஒட்டுக்கேட்டல்' குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி இன்று மே 15, வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளர்.

நிபந்தனைகளின் பேரில் (conditionnelle) அவர் விடுதலையானதாகவும், அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த இலத்திரனியல் காப்பு அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி அவருக்கு இலத்திரனியல் கண்காணிப்பு காப்பு அணிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அகற்றப்பட்டுள்ளது.

நிக்கோலா சர்கோஷி 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக கடமையாற்றியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு கண்காணிப்பு காப்பு அணிவிக்கப்பட்டபோது அவருக்கு 70 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026