Seine-et-Marne : கனரக வாகனம் மோதி - வீதிப்பணியாளர் பலி!!

15 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 1887
கனரக வாகனம் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியதில் வீதிப்பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Mesnil-Amelot (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மே 14, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இல்-து-பிரான்சுக்கான வீதி பாதுகாப்பு அதிகாரசபை (Direction interdépartementale des routes d'Île-de-France - DIRIF) ஊழியர் இருவர் RN 104 சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது கனரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இரண்டாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.