யாழ். தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!

12 வைகாசி 2025 திங்கள் 09:45 | பார்வைகள் : 720
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக குறித்த விகாரை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள்
அந்தவகையில் இன்றையதினமும் இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.