எல்லையில் தணிந்தது பதற்றம்; மூடப்பட்ட 32 விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு உத்தரவு

12 வைகாசி 2025 திங்கள் 14:23 | பார்வைகள் : 194
போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 9ம் தேதி முதல் வரும் மே 15ம் தேதி காலை 5.29 மணி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்த விமான நிலையங்கள் விவரம் பின்வருமாறு:
1. அதம்பூர்
2. அம்பாலா
3. அமிர்தசரஸ்
4. அவந்திபூர்
5. பதின்டா
6. புஜ்
7. பிகானிர்
8. சண்டிகர்
9. ஹல்வாரா
10. ஹிண்டோன்
11. ஜெய்சால்மர்
12. ஜம்மு
13. ஜாம் நகர்
14. ஜோத்பூர்
15. காண்ட்லா
16. காங்ரா
17. கேஷூட்
18. கிஷாங்கர்
19. குலு மணாலி
20. லே
21. லூதியானா
22. முந்த்ரா
23. நாலியா
24. பதான்கோட்
25. பட்டியாலா
26. போர்பந்தர்
27. ராஜ்கோட்
28. சார்சவா
29. ஷிம்லா
30. ஸ்ரீநகர்
31. தோய்ஷ்
32. உத்தர்லாய்